search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் புதிதாக திறக்கப்பட்ட போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளி காதல் ஜோடி தஞ்சம்
    X

    கோவையில் புதிதாக திறக்கப்பட்ட போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளி காதல் ஜோடி தஞ்சம்

    • சிங்காநல்லூரில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் ரேஷ்மா மற்றும் கவுதம் ஒன்றாக படித்தனர்.
    • இதுதொடர்பாக 2 தரப்பு பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    சூலூர்,

    சிதம்பரம் மாவட்டம் கனகசபை நகரை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 23). இவர் காது கேட்பதில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. எம்.சி.ஏ. படித்துள்ளார்.

    சூலூர் அருகே பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கவுதம் (24). இவரும் மாற்றுத்திறனாளி. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

    இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு அவர்கள் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு சூலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த போலீஸ் நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. முதல் காதல் ஜோடியாக கவுதம்-ரேஷ்மா ஆகியோர் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இன்று போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்து உள்ளனர்.

    காதல் திருமணம் செய்து கொண்ட 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழவே போலீசார் அனுமதி அளிப்பர். இதுதொடர்பாக 2 தரப்பு பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் சுமூகமாக தீர்வு காணப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×