search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரி, கிளார்க் தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் - வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது
    X

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரி, கிளார்க் தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் - வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது

    • கிளார்க் பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினர் 28 வயது வரை யிலும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் எழுதலாம்.
    • வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    வங்கி அதிகாரி, கிளார்க் தேர்வு

    இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சானல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ள்ளது. வங்கி அதிகாரி பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 33 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயது வரையிலும் எழுதலாம்.

    கிளார்க் பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினர் 28 வயது வரை யிலும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் எழுதலாம்.

    நேரடி பயிற்சி வகுப்புகள்

    இந்த வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்து கிறது. இப்பயிற்சி வகுப்பு கள் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, மொத்தம் 25 நாட்கள் நடத்தப்பட உள்ளது. பயிற்சியின்போது மாதிரித்தேர்வுகளும் நடத்த ப்படும். இப்பயிற்சி வகுப்பு கள் அனுபவமிக்க வல்லு னர்களால் நடத்தப் படுகிறது.

    பயிற்சி வகுப்புகள் தின மும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ. 7,000 ஆகும்.

    தங்கும் விடுதி வசதி

    பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ. 7,700-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூ. 7,000-க்கான வங்கி வரைவோலை (கனரா வங்கி அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச் செந்தூர்-628216, தூத்துக்குடி மாவ ட்டம்' என்ற முகவரிக்கு தங்களது புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்க ளுடன் அனுப்ப வேண்டும். அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாகவும் இப்பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம்.

    அதன்பின்னர் பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ. 7,000-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் விவரங்கள் பெற 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொsலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×