என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளை தியாகராஜநகரில் மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்.
- போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார்.
நெல்லை:
மின்வாரியத்தின் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டு களுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றும் விதமாக ஒப்பந்த ஊழிய ர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் இன்று பாளை தியாகராஜ நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செய லாளர் முருகன் தொடக்க உரையாற்றினர். கோட்ட செயலாளர்கள் மந்திர மூர்த்தி, இளைய ராஜா, சிவராஜ், வேல்முருகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திட்ட செய லாளர் கந்தசாமி, பொரு ளாளர் நாகையன் தென்காசி மாவட்ட செய லாளர் அயூப் கான் உள்ளிட்டோர் விளக்க வுரை ஆற்றினர். மாநிலச் செயலாளர் வண்ணமுத்து நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்