search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை தியாகராஜநகரில் மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
    X

    மின் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பாளை தியாகராஜநகரில் மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

    • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்.
    • போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    மின்வாரியத்தின் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டு களுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றும் விதமாக ஒப்பந்த ஊழிய ர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் இன்று பாளை தியாகராஜ நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செய லாளர் முருகன் தொடக்க உரையாற்றினர். கோட்ட செயலாளர்கள் மந்திர மூர்த்தி, இளைய ராஜா, சிவராஜ், வேல்முருகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திட்ட செய லாளர் கந்தசாமி, பொரு ளாளர் நாகையன் தென்காசி மாவட்ட செய லாளர் அயூப் கான் உள்ளிட்டோர் விளக்க வுரை ஆற்றினர். மாநிலச் செயலாளர் வண்ணமுத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×