search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமன்குறிச்சி வட்டன்விளை கோவில் கொடை விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
    X

    பூக்குழி இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

    பரமன்குறிச்சி வட்டன்விளை கோவில் கொடை விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்

    • சித்திரை பெருங்கொடைவிழா கடந்த 30-ந்தேதி வருஷாபிசேகத்துடன் தொடங்கியது.
    • விழாவில் சமைய சொற்பொழிவு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை பெருங்கொடைவிழா கடந்த 30-ந்தேதி காலை 8 மணிக்கு வருஷாபிசேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்யும் திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது.

    1-ந்தேதி முதல் தினசரி நண்பகல் மற்றும் நள்ளிரவு நேரங்களில் சிறப்பு பூஜைகளுடன் சுவாமி எழுந்தருளல், வில்லிசை, பால்குடம் பவனி, மஞ்சள் நீராடுதல். சமைய சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி போன்ற சிறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.

    அதிகாலை 3 மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது, தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×