என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூரில் கஞ்சா விற்பவர்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும்- டி.எஸ்.பி. தையல் நாயகி பேட்டி
    X

    சூலூரில் கஞ்சா விற்பவர்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும்- டி.எஸ்.பி. தையல் நாயகி பேட்டி

    • காடாம்பாடி ஊராட்சி பகுதிகளில் போலீசார் ரோந்து பணிக அதிகப்படுத்தப்படும்.
    • சட்ட விரோத செயல்கள் பற்றி காவல்துறையிடம் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும்.

    சூலூர்,

    காடாம்பாடி ஊராட்சி யில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தையல்நாயகி தலைமையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காடா ம்பாடி ஊராட்சி தலைவர் இந்திராணி தங்கராஜ் தலைமை தாங்கினார். சூலூர் இன்ஸ்பெக்டர் மா தையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. தையல்நாயகி கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபெறக்கூடிய சட்ட விரோத செயல்கள் பற்றி காவல்துறையிடம் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும். முறைகேடாக மது பாட்டில்கள் விற்பது, கஞ்சா விற்பனை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதி களில் சில ரவுடிகள் சாலையில் அமர்ந்து மது அருந்துவதாகவும், போதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் சாலையில் செல்லும்போது அச்ச உணர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் முறைகேடாக பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் மது விற்பனை நடைபெறுவ தாகவும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தால் அவர்கள் வரும் அப்போதுங்கிருந்து சென்று விடுகின்றனர். காவல்துறை சென்றவுடன் மீண்டும் அதே இடத்தில் விற்பனை தொடர்கின்றனர் என தெரிவித்தனர்.

    பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என டி.எஸ்.பி. தையல் நாயகி தெரி வித்தார்.

    இன்ஸ்பெக்டர் மாதையன் பேசுகையில் இப்பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கஞ்சா தடுப்பு நடவடிக்கை பற்றி சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படும் என கூறினார்.

    காடாம்பாடி ஊராட்சி பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதாகவும் உறுதி அளித்தார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×