என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிச்சோடிய திருப்பூர்: தீபாவளி கொண்டாட ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள்
    X

    வெறிச்சோடிய திருப்பூர்: தீபாவளி கொண்டாட ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள்

    • 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
    • மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பண்டிகை காலங்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பனியன் நிறுவனங்கள் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக பனியன் நிறுவன தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் மாநகரம் தற்போது அதிக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


    குறிப்பாக ஆடை விற்பனைக்கு பெயர் போன இடமான காதர்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக மூடப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் குமரன் ரோடு, பல்லடம் ரோடு பி.என்.ரோடு போன்ற முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் பெருமளவில் குறைந்து ள்ளது.

    அதேபோல் சொந்த ஊருக்கு செல்லும் தொழி லாளர்கள் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு ஊருக்கு செல்வது வழக்கம்.

    தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற தொழி லாளர்கள் தங்கள் வாகனங்களை வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.


    இதன்காரணமாக வாகன நிறுத்தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிகிறது. பண்டிகை முடிந்து தொழிலாளர்கள் திரும்பும்போதுதான் வாகன நிறுத்தங்களில் இருந்து வாகனங்கள் எண்ணிக்கை குறையும்.

    திருப்பூரில் இருந்து சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் 1.50 லட்சம் பேர் இன்னும் 10 நாட்களுக்கு பிறகே திருப்பூர் திரும்புவார்கள். அதன்பிறகே திருப்பூர் மாநகரம் மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கும்.

    Next Story
    ×