search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    முகாமை பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    சிவகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

    • சிவகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தெருக்களில் புகை மருந்து அடித்தல், நிலவேம்பு குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் முரளி சங்கர் ஆலோசனையின்படி, சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி நலக்கல்வியாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி மேற்பார்வையில் சந்திவிநாயகர் கோவில் தெரு, தெற்கு ரத வீதி, ஆர்.சி.சர்ச் தெரு, அம்பேத்கர் தெரு ஆகிய தெருக்களில் புகை மருந்து அடித்தல், நிலவேம்பு குடிநீர் வழங்கல், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல் மற்றும் வீடுகள் தோறும் சென்று காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு ஆகியன நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜாராம், கவுன்சிலர்கள், குழு மேற்பார்வையாளர் தினேஷ் குமார், துப்புரவு சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முருகையா, இசக்கி, டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.

    Next Story
    ×