search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    சேலம்:

    மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கியாஸ் சிலிண்ட ருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×