search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட நிர்வாகி மாலா தலைமை தாங்கினார்.

    வட்டாரத்தலைவர் பேபி, செயலாளர் செல்வி, மாவட்ட நிர்வாகி கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்.

    அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் பொறுப்பாளர் இளங்கோவன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் பொருளாளர் கஸ்தூரி நன்றி கூறினார்.

    Next Story
    ×