search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றம்
    X

    கோத்தகிரி அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றம்

    • கட்டிடங்கள் பழுதடைந்து அடிக்கடி இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்திலும் பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    கோத்தகிரி

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பழுதடைந்து அடிக்கடி இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது.

    கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளிக்குழந்தைகள் காயம் அடைந்தனர்.இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள பழுதடைந்த பழைய கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நீலகிரி கலெக்டரின் உத்தரவின் பேரில் கோத்தகிரியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

    Next Story
    ×