search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே இடிந்து விழுந்த குளத்தின் சுற்றுச்சுவரை கட்ட கோரிக்கை
    X

    கடையம் அருகே இடிந்து விழுந்த குளத்தின் சுற்றுச்சுவரை கட்ட கோரிக்கை

    • சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.
    • மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட மைலப்பபுரம் கிராமத்தில் பேராமணி குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில் குளக்கரையின் கீழ்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த சுற்றுச்சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.

    தற்பொழுது கீழ்ப்பகுதியில் மொத்தமாக சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால் மைலப்பபுரம், மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பதாலும் ஊருக்குள் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் அருகில் இருந்து அதிகளவில் மாணவ- மாணவிகள் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், தொடர்ந்து குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையும் வலுவிழந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பேராமணி குளத்தில் இடிந்து விழுந்துள்ள சுற்று சுவரை மீண்டும் புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×