search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு தள்ளுவண்டி-குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி
    X

    கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு தள்ளுவண்டி-குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

    • தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.
    • மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார்.

    கோவை,

    கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 20 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து செல்ல தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.

    புதிதாக வாங்கப்பட்ட 45 தள்ளுவண்டிகள் மற்றும் 180 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் மேயர் கல்பனா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வழங்கினார். இதில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×