search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்
    X

    களக்காடு அருகே பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்

    • பீட்டர் தங்க நகைகள் விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார்
    • இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மேகலாவிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் இம்மானுவேல் மனைவி மேகலா (வயது 36). இவர் களக்காட்டில் தையல் கடை வைத்துள்ளார். இவரது கணவரின் நண்பரான அதே ஊரை சேர்ந்த பீட்டர் (33) தங்க நகைகள் விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மேகலாவிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார். மேகலா வும் ரூ.1 லட்சம் கொடுத்து ள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி மேகலா களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பின்ன ரும் பணம் கொடு க்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று பீட்டர், மேகலாவின் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த மேகலா, பீட்டரிடம் பணத்தை திருப்பிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பீட்டர் நீ பணம் தரவே இல்லை. பணத்தை கேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். மேலும் மேகலாவை அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி மேகலா களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பீட்டரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×