search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடலூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் கைது
    X

    வடலூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் கைது

    • அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வடலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
    • ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேலாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    வடலூர் மாருதிநகரை சேர்ந்தவர் விமல் ராஜா. இவரது மனைவி வேளாங்கண்ணி இவரிடம் இவரது பெரியப்பா மகள் எஸ்தர் ராணி கடந்த ஆண்டு வட்டிக்கு ரூ.4,40,000 கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி கொடுத்த பணத்தை எஸ்தரிடம் கேட்டுள்ளார். அதற்கு எஸ்தரோ பணத்தை க்கேட்டு வேளாங்கண்ணி தன்னை மிரட்டுவதாகவும் அளவுக்கு அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வடலூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வடலூர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் வேளாங் கண்ணி் வடலூர் ஆபத்தாரணபுரத்தைச்சேர்ந்த சமூக நல ஆர்வலரார் தனக்கேசவமூர்த்தி (55) கமலநாதன் அறிமுகமானர்கள்.

    இருவரும் வேளாங்கண்ணிக்கு பணத்தை மீட்டு தருவதாகவும், மேலும் போலீஸ் நிலையத்தில் இந்த பிரச்சனையை போலீசாரிடம் பேசி சுமுகமாக தீர்த்து வைப்பதாக கூறி ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேலாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கேசவ மூர்த்தி மற்றும் கமலநாதன் பணத்தை வாங்கி ஏமாற்றி யதை அறிந்த வேளாங்கண்ணி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் இரு வரும் பணத்தை திரும்பிக் கொடுக்க முடியாது என்றும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி வடலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனக்கேசவமூர்த்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கமல நாதன் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×