search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் வக்கீலுக்கு கொலை மிரட்டல்
    X

    நாமக்கல்லில் வக்கீலுக்கு கொலை மிரட்டல்

    • நல்லிபாளையத்தை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் தனது கணவர் முத்துசாமி மீது கொடுத்த புகார் மனு விசாரணைக்காக, முத்துசாமி சார்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.
    • நுழைவு வாயில் அருகே ரங்கநாயகி யும், பெயர் தெரியாத ஒருவரும் முத்துசாமியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள பீமநாயக்கனூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 46), வக்கீல். இவர், நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்கத்தில் 18 ஆண்டு களாக உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, நல்லிபாளையத்தை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் தனது கணவர் முத்துசாமி மீது கொடுத்த புகார் மனு விசாரணைக்காக, முத்துசாமி சார்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.

    அப்போது நுழைவு வாயில் அருகே ரங்கநாயகி யும், பெயர் தெரியாத ஒருவரும் முத்துசாமியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வக்கீல் அய்யப்பன், அவரிடம் நீங்கள் ஏன் என் கட்சிக்காரரிடம் பேசுகிறீர்கள்? என்று கேட்டு உள்ளார்.அதற்கு அந்த நபர், வக்கீல் அய்யப்பனை தகாத வார்த்தையால் திட்டி, உள்ளாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அய்யப்பன் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் காரைக்குடி புதுவயல் பகுதியை சேர்ந்த அலெக்ஸாண்டர் (45) என்ப தும், உளவியல் நிபுணராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×