search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
    X

    அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

    • அதிகாலை கரையை கடந்ததின் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது.
    • விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டா ரங்களில் மாண்டஸ் புயல் அதிகாலை கரையை கடந்ததின் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது. இந்நிலையில் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் செஞ்சி, ஊரணிதங்கள், அனந்தபுரம், மேல்ம லையனூர், அவலூ ர்பேட்டை ஆகிய பகுதி களில் பயிரிடப்பட்ட சுமார் 200 ஏக்கர் நெற்பயி ர்கள் நீரில் மூழ்கி காற்றின் வேகத்தன்மையால் நெல் பயிர்கள் சாய்ந்தது. இத னால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து ள்ளனர்.

    இந்நிலையில் ஊரணி தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய விளைநிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்யிர்கள் நீரில் மூழ்கியதால் கடும் வேதனை அடைந்துள்ளனர். ஆறு மாதமாக பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த நெற்கதி ர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு வேளாண்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×