search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்த வாலிபர்
    X

    தீக்குளிக்க முயன்ற வாலிபரை படத்தில் காணலாம்.

    கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்த வாலிபர்

    • புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் வந்திருந்தார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த நபரிடம் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் வெளிநாட்டில் வேலை செய்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான காட்டுமன்னார்கோயில் பெரியார் நகர் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சார்ந்த நபர் ஒருவர் அவரது வீட்டின் அருகே உள்ள பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அவரிடம் தெரிவித்த போது ஆட்கள் வைத்து மிரட்டுவதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திலும், பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×