search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு
    X

    கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு

    • கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் இதே நிலை நீடித்து வருகின்றது.
    • சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது.

    கடலூர்::

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் இதே நிலை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 நபருக்கு கொ ரோனா ஏற்பட்டு சிகிச்சை பெற்று வர இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அப்போது அவரை சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த வாலி பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தன. ஆனால் இன்று அதிகாலை வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு மருத்துவமனை களிலும் தனியார் மருத்துவ மனைகள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டம் முழு வதும் தீவிர கண்காணிப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா அறிகுறி யுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் இறந்த வாலிபர் கொரோனா தொற்று காரணமாக இறந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் உரிய பரிசோ தனைக்கு அனுப்பி உள்ள னர். இது மட்டுமின்றி இறந்த வாலிபர் வசித்து வந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


    Next Story
    ×