search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

    • சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கோரி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் கொண்டாவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆங்காங்கே அமைக்கப்படும் விநாயகர் சிலை தொடர்பாக விழா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக பாபநாசம் துர்கா மஹாலில் சிறப்பு கூட்டம் பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் போது விநாயகர் சிலை நிறுவுதல், ஊர்வலமாக கொண்டு செல்லுதல், பின்னர் நீர் நிலைகளில் கரைத்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்பாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கோரியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி , சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் விழாக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×