search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உழவர்கள் உரிமை மீட்பு சங்க ஆலோசனை கூட்டம்
    X

    உழவர்கள் உரிமை மீட்பு சங்க ஆலோசனை கூட்டம்

    உழவர்கள் உரிமை மீட்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    தற்சார்பு உழவர்கள் உரிமை மீட்புசங்க ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது கூட்டத்திற்குசமூக நீதி மக்கள் விடுதலை முன்னணி நிறுவனத் தலைவர் நரையூர் வேலு தலைமை தாங்கினார். ராஜ சோழன் விவசாய சங்க மாநிலத் செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.மாநிலத் தலைவர் கணேசன் வரவேற்றுப் பேசினார்.மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் சீர்காழி பிரபாகரன் தொடக்க உரையாற்றினார். உழவர் களம் ஆசிரியர்தெய்வீக தாஸ் அறிமுக உரையாற்றினார்.

    கூட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தை விவசாயத் தொழிலா ளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். திருக்கோவிலூர் தெ ன்பெண்ணை ஆற்று அணை இருந்து வரும் கால்வாய்கள் பண்ருட்டி வரை சிமெண்டு கா ல்வாயாக மாற்றம் செய்ய வேண்டும். இயற்கை உரம் தயா ரிக்க மாடுகள் வாங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    Next Story
    ×