search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.கே.புரத்தில் கட்டிட தொழிலாளர்கள் செயல் வீரர்கள் கூட்டம்
    X

    வி.கே.புரத்தில் கட்டிட தொழிலாளர்கள் செயல் வீரர்கள் கூட்டம்

    • சிறப்பு விருந்தினராக தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில தலைவர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிங்கை:

    தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வி.கே.புரத்தில் நடந்தது. அமைப்புசாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வைரமணி தலைமை தாங்கினார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் பால் மாணிக்கம், கணேசன், கிளை தலைவர் சிவக்குமார், செயலாளர் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பேச்சியப்பன் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில தலைவர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பென்ஷன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதிய தொகையை ஆயிரம் ரூபாய் உயர்த்துவது, அரசு நலத்திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது, தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவது, அமைப்பு சாரா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு அரசு வழங்கி வரும் கல்வித் தொகையை ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல், மாநில கவுரவ ஆலோசகர் குமாரசாமி, மாநில அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×