என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கட்டிட தொழிலாளி தற்கொலை
- தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி.
- நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தச்ச நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story