search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி- எம்.எல்.ஏ ஆய்வு
    X

    கட்டுமான பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி- எம்.எல்.ஏ ஆய்வு

    • ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
    • விரைவில் கழிவறை, விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதை தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.

    தற்போது தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விரைவில் கழிவறை, விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார்.

    இந்த ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,
    திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,
    துணைத்தலைவர் சோபா பாரதிமோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×