என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசின் வெற்றி தொடரும்: ராகுல்காந்தி அடுத்த பிரதமர் ஆவது உறுதி-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேட்டி
- பாரதீய ஜனதா ஆட்சி, பணக்காரர்களுக்கான ஆட்சியாகவே இருக்கிறது என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
- வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ரூபி மனோகரன் தெரிவித்தார்.
நெல்லை:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும் பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதையொட்டி, தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில், சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் காங்கிரஸார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வெற்றியை கொண்டாடினார்கள்.
பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இல்லை என்பதையே, கர்நாடக சட்டசபை தேர்தலில் எங்களது காங்கிரஸ் பேரியக்கம் பெற்றுள்ள அபார வெற்றி எடுத்துக்காட்டுகிறது.
இந்த பாரதீய ஜனதா ஆட்சி, பணக்காரர்களுக்கான ஆட்சியாகவே இருக்கிறது. ஏழைகளும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வேலை வாய்ப்பின்மை பெருகி விட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
மக்களின் இந்த அதிருப்தி, கர்நாடக தேர்தலில் எதிரொலித்து இருக்கிறது. இனி, இது நாடு முழுவதும் தொடரும்.
கர்நாடகாவில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தொடக்கம்தான். வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகளில் நானும் 22 நாட்கள் ஈடுபட்டு இருக்கிறேன். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான மிகப்பெரிய எழுச்சியை கண்கூடாக காண முடிந்தது. அதன் வெளிப்பாடாகவே தேர்தல் முடிவும் அமைந்தது.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தொடரும். ராகுல்காந்தி, இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவது உறுதி.
இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்