search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் காங்கிரஸ் பாத யாத்திரை - கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்
    X

    கே.எஸ். அழகிரி பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசிய காட்சி. 

    தென்காசியில் காங்கிரஸ் பாத யாத்திரை - கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்

    • 75 கி.மீ., தூர பாத யாத்திரையை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
    • குற்றாலத்தில் தொடங்கிய பாத யாத்திரை மேலகரம், தென்காசி வழியாக கடையநல்லூர் சென்றடைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு குற்றாலத்தில் 75 கி.மீ., தூர பாத யாத்திரையை காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இதயத்துல்லா, மாவட்ட பொருளாளர் முரளிராஜா, முன்னாள் எம்.பி., ராமசுப்பு, மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, காமராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா, மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், சுரண்டை நகராட்சித் தலைவர் வள்ளி முருகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி உதயகிருஷ்ணன், செங்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சீவநல்லூர் சட்டநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சங்கரகுமார், மாநில பேச்சாளர்கள் பால்துரை, ஆலடி சங்கரையா, ஆய்க்குடி பெரியசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் செங்கோட்டை முத்துசாமி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், மாவட்ட துணைத் தலைவர்கள் திருஞானம், சிவராமகிருஷ்ணன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் குற்றாலம் பெருமாள், செங்கோட்டை மூக்கையா, கீழப்பாவூர் தங்கரத்தினம், வாசுதேவநல்லூர் மகேந்திரா, நகர காங்கிரஸ் தலைவர்கள் தென்காசி ஆனந்த பவன் காதர் மைதீன், செங்கோட்டை ராமர், சரண்டை ஜெயபால், புளியங்குடி பால்ராஜ், குற்றாலம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் துரை, செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் முருகையா, வர்த்தக அணி மாவட்ட பொதுச் செயலாளர் தாயார் தோப்பு ராமர், கணக்கப்பிள்ளைவலசை ரமேஷ், பெரிய பிள்ளைவலசை சாய்பு தென்காசி கணேசன், மத்தளம்பாறை ஜேம்ஸ், செங்கோட்டை ராஜீவ் காந்தி, இளைஞர் காங்கிரஸ் சந்தோஷ் ஜார்ஜ், சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குற்றாலத்தில் தொடங்கிய பாத யாத்திரை மேலகரம், தென்காசி வழியாக கடையநல்லூர் சென்றடைந்தது. இன்று கடையநல்லூர், புளியங்குடி வழியாக வாசுதேவநல்லூர் சென்றடைகிறது.

    நாளை (11-ந் தேதி) வாசுதேவநல்லூர், தலை வன்கோட்டை வழியாக சங்கரன்கோவில் சென்றடைகிறது.

    12-ந் தேதி சங்கரன்கோவில் முதல் ஆலங்குளம் வரையிலும் 13-ந் தேதி ஆலங்குளம் முதல் கடையம் வரையும், 14-ந் தேதி கடையம் முதல் சுரண்டை வரையிலும் இந்தப் பாதயாத்திரை நடைபெற உள்ளது.

    Next Story
    ×