search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
    X

    கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

    கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

    • தமிழ்நாடு முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் தொட்டி கள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உட்பட 14 பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
    • அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஆட்டோ மூலம் கடந்த 5 நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் தொட்டி கள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உட்பட 14 பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி

    அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஆட்டோ மூலம் கடந்த 5 நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் சத்தியமூர்த்தி உத்தரவின்படி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மெயின் ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் சூப்பர் மார்க்கெட்டுகள், உணவ கங்கள், பேக்கிரிகள், டீக்கடை கள், பழக்கடைகள் மற்றும் பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்ப டுத்தபடு கிறதா? என ஆய்வு செய்தனர்.

    பிளாஸ்டிக் பறிமுதல்

    ஆய்வில் ஒரு சில கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த சுமார் 3 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் தொடர்பாக செயல் அலுவலர் கூறும்போது, தற்போது கடைகளிலும், பொதுமக்களிடமும் பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு எடுத்து கூறி இனிவரும் காலங்களில் பயன்படுத்தினாலோ, அல்லது விற்பனை செய்தாலோ பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்ப டுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது என்று கூறினார்.

    Next Story
    ×