search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச தொலைபேசி எண் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம்
    X

    தஞ்சையில் உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அறிவிப்பு நோட்டீசை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இலவச தொலைபேசி எண் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம்

    • அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
    • 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறம் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்களை வினி யோகம் செய்து வருகிறது.

    இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேசன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு ள்ளது. இது காவல்துறை தலைவரின் நேரடி கண்கா ணிப்பில் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×