என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை டவுனில் துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார்
- ரெயில்வே பீடர் சாலைல் உள்ள பொது குடிநீர் குழாயில் துர்நாற்றத்துடன் குடிநீர் வருகிறது.
- துர்நாற்றத்துடன் வரும் குடிநீரை குடித்தால் நோய் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம், நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்க தலைவர் அயூப் அளித்துள்ள கோ ரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-
நெல்லை டவுன் வாகையடி முக்கு அருகில் ரெயில்வே பீடர் சாலை உள்ளது. இங்குள்ள பொது குடிநீர் குழாயில் நீண்ட நாட்களாகவே துர்நாற்றத்துடன் குடிநீர் வருகிறது.
இந்த தண்ணீரை அந்த தெருவில் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் குடிநீருக்காக பிடித்து செல்கின்றனர். மேலும் இந்த பாதையில் நடந்து செல்வோர்களில் பலரும் இந்த குடிநீரை தான் குடித்துவிட்டு செல்கின்றனர். துர்நாற்றத்துடன் வரும் இந்த குடிநீரை குடித்தால் நோய் தொற்று பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வரும் இந்த சூழ்நிலையில் துர்நாற்றத் துடன் வரும் இந்த குடிநீரை உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சுத்த மான குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த குடிநீர் நல்லியை அடை த்து வைத்தாலும் குடிநீர் அதிகளவில் தேவை யில்லாது வெளியே செல்கிறது. அதையும் சரி செய்திட வேண்டும்
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






