search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில்  கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.


    பாவூர்சத்திரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணியை விரைந்து தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தென்காசி-நெல்லை நான்கு வழிச் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும், ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணியை விரைந்து தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாடசாமி,வேலு, மாதவன், முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.தென்காசி மாவட்ட செயலாளர் அய்யப்பன் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஷேக்மைதீன், முத்துசாமி, சுப்பிரமணியன், குருசாமி, பிச்சுமணி, செல்வமணி ஆகியோர் பேசினர். ஏ.ஐ.சி.டி.யு மாநில தலைவர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் அரிபாலகிருஷ்ணன், அண்ணாதுரை,ராமசாமி, பாலசுப்பிர மணியன்,நடராஜகுமார், கருப்பையா, அரிச்சந்திரன் ,சிவசக்தி, முப்புடாதிமுத்து, இசக்கிமுத்து, கோவிந்தராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள், பெண்கள் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஒன்றிய கமிட்டி உறுப்பினர் மாரியப்பன் நன்றி கூறினார்.


    Next Story
    ×