இளநிலை பட்டப்படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு

(யு.ஜி.சி) சார்பில் பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு
Published on

சேலம்:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்பு களில் மாணவர்கள் சேர ஒவ்ெவாரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) சார்பில் பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

சேலம், நாமக்கல்

அதன்படி முதற்கட்டமாக நாடு முழுவதும் நேற்று 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் திரளானோர் எழுதினர். சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், தடுமாற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்தக் கட்ட தேர்வுகள் ஜூன் முதல் வாரம் வரை நடைபெறுகின்றன. அதுபோல் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com