என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பாளையம் அருகே கல்லூரி மாணவரிடம் நகை பறிப்பு
- மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் அந்த வழியாக சென்றவர்கள் உதவி செய்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை அருகே உள்ள குரும்பபாளையம் வையாபுரி நகரை சேர்ந்தவர் தேசிகன். இவரது மகன் அருணகிரிதரன் (வயது 23). இவர் தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் எம்.பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சரவணம்பட்டியில் உள்ள நண்பர்களை பார்ப்ப தற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் கோவை- சத்தி ரோட்டி கரட்டுமேடு அருகே சென்ற போது பெட்ரோல் காலியானது.
இதனையடுத்து அருண கிரிதரன் மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அருணகிரிதரனுக்கு உதவி செய்தனர்.
அவர்கள் மோட்டார் சைக்கிளை டோக் செய்து சென்றனர். அப்போது அவர் அருணகிரிதரன் கழுத்தில் அணிந்து இருந்த 1 அரை பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி செய்வது போல நடித்து கல்லூரி மாணவரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்