search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  கல்லூரி மாணவி மாயம்
    X

    பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

    • பூர்ணிமா விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பூர்ணிமா என்ன ஆனார் ? எங்கு சென்றார் ? யாரேனும் இவரை கடத்தி சென்றனரா ?

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் பூர்ணிமா (வயது 18). இவர், விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பூர்ணிமாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பூர்ணிமாவின் தந்தை பாஸ்கரன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல்ேபான பூர்ணிமா என்ன ஆனார் ? எங்கு சென்றார் ? யாரேனும் இவரை கடத்தி சென்றனரா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×