என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி
- மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி கீேழ விழுந்தது.
- மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் இன்று நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இன்று தேர்வு நடை பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.
அவர்கள் கல்லூரியில் இருந்து மன்னம்பந்தம் சாலையில் சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. உடனே மோட்டார் சைக்கிளை ஒட்டிய மாணவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி கீேழ விழுந்தது.
இந்த சாலை விபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரையபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லோகேஸ்வரன் (வயது 17) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுாயம் அடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரித்து வருகிறார்கள். சாலை விபத்தில் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்