search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.என்.பாளையம் அருகே கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    டி.என்.பாளையம் அருகே கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

    • வீட்டில் உள்ள அறையில் மவுலி சங்கர் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மவுலி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மதன்குமார், மவுலி சங்கர் என 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் மதன்குமார் டி.என்.பாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் மவுலி சங்கர் (18) சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மூர்த்தி அவரது மனைவி, மூத்த மகன் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். கல்லூரி விடுமுறை என்பதால் மவுலிசங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் மாலை வேலை முடிந்து மதன்குமார் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.

    இதனை அடுத்து மதன்குமார் மாடிப்படி வழியாக ஏறி கீழே இறங்கி பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மவுலி சங்கர் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மவுலி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மவுலிசங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலி சங்கர் எதற்காக? தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×