என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நங்கவள்ளியில் கல்லூரி மாணவர் சாவு
- சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியில் கல்லூரி மாணவர் பாலியானார்.
- தற்கொலைக்கு தூண்டியதாக தாய்-மகன் மீது வழக்கு
நங்கவள்ளி:
சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). இவர், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரிடம்,5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனின் மருத்துவச் செலவுக்காக ரூ.65 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
இதில், வட்டியுடன் சேர்த்து 2 ஆண்டுகளுக்கு முன்பு, 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து விட்டார். மீதித்தொகை, 15 ஆயிரம் ரூபாயை திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சுதாகர், அவருடைய தாயார் சரஸ்வதி ஆகிய இருவரும் ஆனந்தன் வீட்டிற்கு சென்று, பாக்கித் தொகையை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், ஆனந்தன் மகனான கல்லூரி மாணவர் நிர்மல் ராஜ் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியை, கடனுக்காக பிடிக்க சென்றுள்ளனர். எனது அப்பா வாங்கிய கடனுக்காக, நான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை எதற்கு பிடிக்க செல்கிறீர்கள் என நிர்மல் ராஜ் கேட்டுள்ளார்.
வாங்கிய கடனை திருப்பித் தர துப்பில்லை, நீங்கள் எல்லாம் எதுக்குடா உயிரோடு இருக்கிறீங்க, போய் சாவுங்கடா என, சுதாகர் அவரது தாயார் சரஸ்வதி இருவரும் சேர்ந்து, நிர்மல் ராஜ் மற்றும் அவரது பெற்றோரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிர்மல் ராஜ் தனது வீட்டிற்குள் சென்று அங்கிருந்த மின்விசிறியில், சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நங்கவள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நங்கவள்ளி போலீசார் விசாரித்தனர். விசாரணை யில் சுதாகர் மற்றும் சரஸ்வதி திட்டியதால் நிர்மல்ராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சுதாகர், சரஸ்வதி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சுதாகரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரஸ்வதியை போலீ சார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்