search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை
    X

    மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

    • கவுதமன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஓட்டல் ஊழியர் சாப்பாடு வாங்க வேண்டுமா என கேட்பதற்காக அறைக்கு சென்றார்.

    கோவை,

    கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் முருகன். இவர மகன் கவுதமன் (வயது 18). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். பின்னர் அங்குள்ள லாட்ஜில் ஓய்வு எடுப்பதாக கூறி அறை எடுத்து தங்கினார். பின்னர் ஓட்டல் ஊழியர் சாப்பாடு வாங்க வேண்டுமா என கேட்பதற்காக அறைக்கு சென்றார். அப்போது அறைக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

    சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் தற்கொைல செய்து கொண்ட கல்லூ ரி மாணவர் கவுதமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×