search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    X

    கோப்புபடம்

    பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

    • பழுடைந்த மின்கம்பங்களை முன்னுரிமை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும்.
    • யூரியா 2 ஆயிரத்து 281 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 766 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 736 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 460 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 194 மனுக்கள் அளிக்கப்பட்டன.

    கூட்டத்தில் கலெக்டர் வினீத் பேசும்போது, நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2 ஆயிரத்து 281 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 766 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 736 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 460 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறப்படடது. ஆனால் மின்கம்பங்களை மாற்றாமல் உள்ளனர். ஒதுக்கீடு செய்யப்படும் மின்கம்பங்களை வேறு பணிக்கு வழங்காமல் பழுடைந்த மின்கம்பங்களை முன்னுரிமை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும். இதில் தீவிர கவனம் செலுத்தி அடுத்து வரும் கூட்டத்தில் அனைத்து விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸி, இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×