search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் வீட்டு வாசலில் பூ வைத்த தகராறில் மோதல் - 2 பேர் கைது
    X

    சங்கரன்கோவிலில் வீட்டு வாசலில் பூ வைத்த தகராறில் மோதல் - 2 பேர் கைது

    • சம்பவத்தன்று புதுமனை தெரு பகுதியை சேர்ந்த பாலு , சங்கம் ஆகியோர் மணிகண்டன் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
    • இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார், அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் மணிகண்டன். இவர் சம்பவத்தன்று புதுமனை தெரு பகுதியை சேர்ந்த பாலு (வயது 29), சங்கம்(34) ஆகியோர் மணிகண்டன் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க சிவசக்தி என்பவர் அங்கு வந்துள்ளார். அவரை 2 பேரும் தாக்கி உள்ளனர்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாலுவை கைது செய்தனர். இதற்கிடையே தகராறின் போது தனது 12 பவுன் தங்கநகையை காணவில்லை என்று பாலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×