search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணார்பேட்டையில் வாயில் கருப்பு துணி கட்டி சி.ஐ.டி.யு. போராட்டம்
    X

    வாயில் கருப்பு துணி கட்டி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய காட்சி.

    வண்ணார்பேட்டையில் வாயில் கருப்பு துணி கட்டி சி.ஐ.டி.யு. போராட்டம்

    • அரசு போக்குவரத்து கழகம் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் வண்ணார் பேட்டையில் உள்ள போக்குவரத்து மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி நிர்வாகிகள் பேசினார்கள்.

    நெல்லை:

    அரசு போக்குவரத்து கழகம் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் வண்ணார் பேட்டையில் உள்ள போக்குவரத்து மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    சங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். துரைராஜ் தொடங்கி வைத்து பேசினார். பொது செயலாளர் ஜோதி நிறைவு உரையாற்றினார்.

    நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்களை பொது மக்கள், மாணவர்கள் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும், போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி நிர்வாகிகள் பேசினார்கள். பொரு ளாளர் குமரகுருபரன், துணை பொது செய லாளர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பால சுப்பிர மணியன், சங்கிலி பூதத்தான், அமல்ராஜ் உள்பட பலர் வாயில் கருப்பு துணி கட்டி கலந்து கொண்டனர்.

    Next Story
    ×