search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள சிகரெட்கள் பறிமுதல்
    X

    (கோப்பு படம்)

    வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள சிகரெட்கள் பறிமுதல்

    • இரண்டு பயணிகளிடம் இருந்து ரூ.21.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றது.
    • கடத்தலில் ஈடுபட்ட பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மாத்யூ ஜால்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

    கடந்த 29-ந்தேதி, துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்ட போது, ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 பெட்டி சிகரெட்டுகளை மறைத்து கொண்டுவந்தது தெரிய வந்தது.அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 260 கிராம் எடைகொண்ட தங்கமும் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11.47 லட்சம் ஆகும்.

    மற்றொரு சம்பவத்தில், துபாய் பயணி ஒருவரிடம் இருந்து, தூள் வடிவத்தில் தங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்த ஒரு தங்கச் சங்கிலியும், ஒரு தங்க நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவற்றின் மொத்த எடை 223 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.9.84 லட்சம் ஆகும். இரண்டு பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.21.31 லட்சம் ஆகும். இரண்டு பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×