search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை எப்.எக்ஸ். கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
    X

    கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்.

    நெல்லை எப்.எக்ஸ். கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

    • எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
    • கிறிஸ்துமஸ் விழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பொதுவான விழா

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி, எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். துணை தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக நெல்லை துதியின் கோட்டை தலைமை போதகர் ரத்னம் பால் கலந்துகொண்டு கிறிஸ்து மஸ் உரையாற்றினார். இணை போதகர் நிக்ஸன் பால் வெஸ்லி சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு ஏழை, எளிய, மற்றும் ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி மக்களுக்கு உதவிகளையும், பரிசுகளையும் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிறிஸ்துமஸ் விழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பொதுவான விழா. கடவுள் மனிதராக அவதரித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளை செய்தவர். மக்களை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வாரு வீட்டிலும் நட்சத்திரம் தொங்கவிடப்படுகிறது.

    தன்னுயிரை கொடுத்து மக்களை காப்பாற்றியவர். எல்லோருக்கும் அவரது ஆசீர்வாதம் கிடைக்கும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கிறிஸ்து மஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன. மேலும் கல்லூரி வளாகத்தில் அனைத்து துறை மாணவர்களும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்திருந்தனர்.

    கல்லூரி நிர்வாக இயக்குநர் அருண்பாபு, ஸ்காட் குழும நிறுவனங்க ளின் தாளாளர் பிரிய தர்ஷினி அருண்பாபு, பொதுமேலாளர்கள் ஜெயக் குமார், கிருஷ்ணகுமார், காந்தி இயக்குநர் ஜான் கென்னடி, கணினித்துறை இயக்குநர் முகமது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன், பள்ளி முதல்வர் பத்மினி வள்ளி மற்றும் பேராசிரியர்கள்கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேரா சிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    Next Story
    ×