search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
    X

    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சித்திரை பெருவிழாவுக்காக கொடியேற்றம் நடைபெற்றது.

    சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

    • மே 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சியும், மே 6-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
    • 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தன்னைத்தானே பூஜித்தல் வருகிற மே 2-ந்தேதியும், தொடர்ந்து, மே 6-ந்தேதி தேரோட்டமும், 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதியுலா மற்றும் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×