என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்தம் திருவிழா - 26-ந் தேதி தொடங்குகிறது
- ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
- வைகாசி வசந்தம் திருவிழாவும் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கி ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்தம் திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் விமர்சையாக நடக்கிறது.
இதேபோல் வைகாசி வசந்தம் திருவிழாவும் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கி ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தரு ளுகிறார்.
அங்கு ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மண்டகப்படி தாரர் மூலம் சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடைபெற்று இரவு கிரி வீதி வழியாக வந்து கோவில் சேர்தல் நடைபெறுகிறது.
Next Story