கலெக்டர் அலுவலக அரசு ஊழியர்கள் வசதிக்காக குழந்தைகள் காப்பகம்

இந்த காப்பகம் 28-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
கலெக்டர் அலுவலக அரசு ஊழியர்கள் வசதிக்காக குழந்தைகள் காப்பகம்
Published on

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வசதி க்காக குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, சமூக நலம், குழந்தைகள் பாதுகாப்பு, தமிழ் வளர்ச்சி, கருவூலம், கலால், ஆதிதிராவிடர் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், சமூக பாதுகாப்பு, மாற்று த்திறனாளிகள் மறுவாழ்வு உள்ளிட்ட துறைகளில் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்று கின்றனர்.

இவர்களில் பள்ளி செல்லும் வயதை அடை யாத குழந்தைகள் இருக்கும் பெற்றோரும் உள்ளனர். அவர்களின் நலன் கருதி, குழந்தைகள் காப்பகம் அமைக்க கலெக்டர் கிரா ந்திகுமார் உத்தரவி ட்டார்.

அதன்படி கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கட்டிடத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூடம் அருகே காப்பகம் அமைக்க ப்பட்டு ள்ளது.

சின்னஞ்சிறு குழந்தை கள் மகிழ்ச்சியான சூழலில், பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அக்கூடம் முழுவதும் விலங்குகள், பறவைகளின் உருவங்கள் கலர்,கலராக வரையப்ப ட்டுள்ளன. கரும் பலகை, தொலைக்காட்சி ஆகிய வையும் நிறுவப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பும் விளையாட்டு சாதன ங்களும், குட்டி நாற்காலி களும் வாங்கப்பட்டுள்ளன.

வருகிற 28-ந் தேதி முதல் செயல்படுத்த கலெக்டர் உத்தரவிட்டு ள்ளார். அதற்காக கலெ க்டரின் நேர்முக உதவியா ளர் கோகிலா தலைமையி லான அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். குழந்தைகளை பராமரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஒரு ஆசிரியை நியமிக்கப்பட உள்ளனர்.

ஒருங்கிணைந்த ஊட்ட ச்சத்து மேம்பாட்டு திட்டம் மூலம் ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டு ள்ளது.

கலெக்டரின் இம்முயற்சி சிறு குழந்தைகளுடன் இருக்கும் அரசு ஊழியர்க ளுக்கு பேருதவியாக இருக்கும். பணியிடத்தி லேயே குழந்தைகள் காப்ப கமும் இருப்பதால், நிம்மதி யான மனநிலையுடன் அரசு ஊழியர்கள் பணியாற்றும் வாய்ப்பு உருவாகும் என அதிகாரிகள் எதிர்பா ர்க்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com