search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதித்தனார் கல்லூரியில் சதுரங்க போட்டி
    X

    விழாவில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பேசியபோது எடுத்தபடம்.

    ஆதித்தனார் கல்லூரியில் சதுரங்க போட்டி

    • ஆதித்தனார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது
    • போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சதுரங்க கிளப்பின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. சதுரங்க கிளப்பின் இயக்குனர் சி.மோதிலால் தினேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் மற்றும் உடற்கல்வியியல் துறை தலைவர் டிஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 60 மாணவர்கள் பங்கு பெற்றனர். போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் முதல் பரிசை செந்தூர்தேவியும், 2-ம் பரிசை விஜயலெட்சுமியும், 3-ம் பரிசை மதுபாலா, வனசக்திகனி மற்றும் குணவதி ஆகியோர் பெற்றனர். மேலும் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெ.செல்வவிநாயகம், 2-ம் பரிசை சி.ஜெய்சுதன், 3-ம் பரிசை சு.யோகலிங்கம், சு.சுவிட்சன் தாமஸ் மற்றும் மொ.அப்துல் ரசாக் ஆகியோரும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவ செயலர் எஸ்.ஜெய்சுதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×