என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு
- மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென காந்திமதி கழுத்தில் கிடந்த 4 கிராம் நகையை பறித்து சென்றார்.
- செயின் பறிப்பு தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை தியாகராஜநகர் 8-வது வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மனைவி காந்திமதி (வயது 58).
இவர் இன்று அதிகாலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென காந்திமதி கழுத்தில் கிடந்த 4 கிராம் நகையை பறித்து சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிசென்றார்.
இதுதொடர்பாக அவர் பெருமாள்புரம் ேபாலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
Next Story






