என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்
Byமாலை மலர்29 Aug 2022 9:37 AM GMT
- தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் மகப்பேறு மருத்துவா் தீபிகா ரேஷ்மியை பரிசோதித்தனர்.
- பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் ரேஷ்மி ( வயது 24). கர்பிணி பெண்ணான இவரை தலை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் மகப்பேறு மருத்துவா் தீபிகா ரேஷ்மியை பரிசோதித்தனர்.பரிசோதனையில் அவருக்கு சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து ரேஷ்மிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது. அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைகளும் பொது அறுவை சிகிச்சைகளும் செயல்பட்டு வருகிறது.
தற்போது அறுவை சிகிச்சை மூலம் பிரசவமும் வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவா் ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X