search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருட்டு
    X

    ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருட்டு

    • ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
    • குழந்தையுடன் சென்று கைவரிசை காட்டிய தம்பதிக்கு வலைவீச்சு

    ஆத்தூர்:

    ஆத்தூரில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.

    செல்போன் திருட்டு

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பாத்திரக் கடை உள்ளது. இந்த கடைக்கு தேவையான பாத்திரங்கள் நேற்று காலை வெளியூரில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்தது.

    இந்த வாகனத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்தார். இவர், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை வண்டியின் முன் பகுதியில் வைத்தவிட்டு வாகனத்தின் மேலே ஏறி மழை பாதுகாப்புக்காக தார்பாய் போட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே குழந்தையுடன் சென்ற தம்பதி, வாகனத்தில் செல்போன் இருப்பதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முன்பு அனுப்பிவிட்டு குழந்தையுடன் சென்று அப்பெண்ணின் கணவர், செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதன் சி.சி.டி.வி காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தம்பதிக்கு வலைவீச்சு

    இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப் பகலில் சரக்கு வாகனத்தில் செல்போன் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×