என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிபன் கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு
    X

    டிபன் கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு

    • மர்மநபர்கள் 3 பேர் தியேட்டருக்கு செல்வது எப்படி? என வழி கேட்டனர்.
    • பணம் கொடுக்க மறுத்ததால் செல்போனை பறித்து விட்டு தப்பியோடினர்.

    கோவை, ஜூலை.31-

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டை சேர்ந்தவர் மகேந்திரன்(43). இவர் காந்திபுரம் கோகலே வீதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மகேந்திரன் கடையில் இருந்தார்

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மகேந்திரனிடம் தியேட்டருக்கு செல்வது எப்படி? என வழி கேட்டனர்.

    அவர் முகவரி சொல்லிக்கொண்டிருந்த போது ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேந்திரனின் கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டினார்.

    அவர் கொடுக்க மறுத்ததால் செல்போனை பிடுங்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டனை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன்(26), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி விவேக்(25), கோவை செங்காட்டை சேர்ந்த பரணிகுமார்(23) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×