search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழா நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்
    X

    டி.டி.டி.ஏ. சிறப்பு குழந்தைகள் பள்ளியில் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழா நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்

    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. விழாவுக்கு தலைமை தாங்கி சங்கரலிங்க சுவாமி கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
    • தொடர்ந்து 23- வது வார்டு வடக்கு ரதவிதியில் பொதுமக்களுக்கு இனிப்பு, சேலை வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    நகர தி.மு.க. செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சங்கரலிங்க சுவாமி கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    தொடர்ந்து 23- வது வார்டு வடக்கு ரதவிதியில் பொதுமக்களுக்கு இனிப்பு, சேலை வழங்கப்பட்டது.

    5-வது வார்டு இலவங்குளம் ரோட்டில் கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதேபோல் தற்காலிக பஸ் நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கில் 70 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து 21- வது வார்டு வடகாசி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் டி.டி.டி.ஏ. சிறப்பு குழந்தைகள் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், துணை செயலாளர்கள் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், இளைஞர் அணி சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, குவளைக்கண்ணி பஞ்சாயத்து தலைவர் தினேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், மூத்த உறுப்பினர் சந்திரன்,

    வார்டு செயலாளர்கள் தங்கவேல், துரைபாண்டியன், காளிச்சாமிபாண்டியன், கணேசன், வைரவேல், சதாசிவம், செந்தில்குமார், சுப்பிரமணியன், மாரிராஜ், ஆறுமுகம், சங்கரன், சிவசங்கரநாராயணன், வீராசாமி, வீரமணி, தடிகாரன், சரவணன்,

    Next Story
    ×